Thursday, April 18, 2013

தீராத வாயிற்று வலியை குணமடையச் செய்யும் பதிகம்

கூற்றாயின வாறு விலக்கலீர்
         கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
         பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
         குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைகெடில
         வீரட்டானத்துறை அம்மானே

நெஞ்சம் உமக்கேயிட மாகவைத்தேன்
         நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சமிது ஒப்பது கண்டறியேன்
         வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
         நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில
         வீரட்டானத்துறை அம்மானே


பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
         படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தே யுமக்காட் செய்து வாழலுற்றார்
         சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார் பொடிகொண்டு மெயபூசவல்லீர்
         பெற்றமேற்று கந்தீர் சுற்றும் வெண்டலைக் கொண்டு
அணிந்தீர் அடிகேளதிகைக் கெடில

         வீரட்டானத்துறை அம்மானே

முன்னம் அடியேன் அறியாமையினால்
           முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு உமக்கு ஆளும் பட்டேன்
            சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
            தலையாயவர் தம்கடன் ஆவதுதான்
அன்னநடையார் அதிகைக் கெடில

           வீரட்டானத்துறை அம்மானே

காத்தாள்பவர் காவல் இகழ்தமையால்
           கரைநின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
           நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
          வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர் ஆதி கைக்கெடில

          வீரட்டானத்துறை அம்மானே

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
          தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
          உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யில்பலி கொண்டுழல்வாய்
          உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அளந்தேன் அடியேன் அதி கைக்கெடில

         வீரட்டானத்துறை அம்மானே

உயர்ந்தேன்மனை வாழ்கையையும் ஒண்பொருளும்
          ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்காட்செய்து வாழலுற்றால்
          வழிகின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே
          பறித்துப் புரட்டி அறுத் தீர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில

          வீரட்டானத்துறை அம்மானே

வலித்தேன் மனை வாழ்கையை மகிழ்ந்தடியேன்
          வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச்
          சங்க வெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே
          கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில
         வீரட்டானத்துறை அம்மானே


பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
         புரிபுன் சடையீர் மேலயும் பிறையீர்
துன்பே கவலை பிணிஎன்றி வற்றை
         நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மையினித் தெளியார்
         அடியார் படுவதி துவே யாகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில

         வீரட்டானத்துறை அம்மானே

போர்த்தாய் அங்கொர் ஆணையின் ஈருரித்தோல்
          புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ்
          அடர்த்திட்டருள் செய்து அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
         என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில

         வீரட்டானத்துறை அம்மானே

Thursday, January 10, 2013

வீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைகள் இனிதே முடிய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்

வேத கேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனொடு தேரரை
வாதில்வென்றழிக் கத்திருவுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

வைதிகத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திருவுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திருவுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கருத்த வாழ் அமண் கையர்கள் தம்மோடும்
செறுத்து வாதுசெய்யத் திருவுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

 வேட்டு வேள்வி செயும் பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டிலானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

அழலது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாது செயத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

 நீலமேனி அமணர் திறந்து நின்
சீலம் வாதுசெயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனுங் காண்பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

 அன்று முப்புரம் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

கூடல் ஆல வாய்க் கோனை விடை கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே

திருச்சிற்றம்பலம்