Thursday, January 10, 2013

வீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைகள் இனிதே முடிய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்

வேத கேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனொடு தேரரை
வாதில்வென்றழிக் கத்திருவுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

வைதிகத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திருவுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திருவுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கருத்த வாழ் அமண் கையர்கள் தம்மோடும்
செறுத்து வாதுசெய்யத் திருவுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

 வேட்டு வேள்வி செயும் பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டிலானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

அழலது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாது செயத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

 நீலமேனி அமணர் திறந்து நின்
சீலம் வாதுசெயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனுங் காண்பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

 அன்று முப்புரம் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே.

கூடல் ஆல வாய்க் கோனை விடை கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே

திருச்சிற்றம்பலம்