Friday, April 16, 2010

வெப்பத்தினால் உண்டாகும் நோய்களான ஜுரம், அம்மை, வயிற்றுவலி முதலியன நீங்கச் செய்யும் பதிகம்


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே

அருந்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொறுத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாளவாயான் திருநீறே

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவாயான் திருநீறே

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்டமிடற்று எம் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் எத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

திருச்சிற்றம்பலம்
























குழந்தை செல்வம் கொடுக்கும் பதிகம்


கண்காட்டும் நுதலானுங், கனல் காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே

மண்ணோடு நீர், அனல், காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினோடு ஆண் பெருமையோடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே

விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல் விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகு என்று
தடமண்டு துறைகெண்டை தாமரையின்பூ மறையக்
கடல் விண்ட கதிர் முத்த நகை காட்டும் காட்சியதே

வேலைமலி தண்கானல் வெண் காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேல் அடர், வெங்காலன், உயிர், விண்டபினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதியநுதல் உமையோர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பலஒதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைந்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறைவனே

பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோவில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர் வரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழிபொருள் என்றும்
பேதையர்கள் அவர், பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே

தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே

திருச்சிற்றம்பலம்





















தடைபட்ட திருமணம் இனிதே விரைவில் நடைபெற (ஆண், பெண் இருவருக்கும்) பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்


சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே

சிந்தா எனுமால் சிவனே எனுமால்
முந்தா எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே

அறையார் கழலும் அழல் வாயரவும்
பிறையார் சடையும் உடையார் பெரிய
மறையோர் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளைகொண் டெழில் வவ்வினையே

ஒலிநீர் சடையில் கரந்தாயுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வாய்இவளை
மெலிநீர்மையள் ஆக்கவும் வேண்டினையே

துணிநீல வண்ணம் முகில் தோன்றியன்ன
மணிநீலகண்டம் உடையாய் மருகல்
கணிநீலவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீல ஒண்கண் அயர்வு ஆக்கினையே

பலரும் பரவப்படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்றுடையாய் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோர்ந்து
அலறும் படுமோ அடியாள் இவளே

வழுவாள் பெருமான் கழல் வாழ்கஎனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே

இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே

எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியாத தொர் தீத்திரளாய் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக்கினையே

அறிவில் சமணும் அலர் சாக்கியரும்
நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறிஏந்து கையாய் மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே

வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே

திருச்சிற்றம்பலம்








Tuesday, April 6, 2010

பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே

கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரைஏருஞ் சிராப்பள்ளி
வேம்முகவேழ்ந்து ஈருரி போர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே

மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

துறை மல்கு சாரற் சுனை மல்கு நிலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி யுடையவன் எங்கள் பெருமானே

கொலை வரையாத கொள்கையர் தங்கம் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமையுரைப் பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே

வெய்யதண் சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய போன் சேருஞ் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வார் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே

வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிர் றாகாதே

மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன் தன்
தலைகலனாகப் பலி திரிந்துண்பர் பழியோரார்
சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால்
சிலவல போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடை செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

நானாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெருதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே

தேனயம் பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத் தவரோடு மன்னி வாழ்வரே

திருச்சிற்றம்பலம்

வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியாபாரம் - இவற்றில் வருவாய் பெருக்கவும் படிக்க வேண்டிய பதிகம்

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கரைகொள் காசினை முறைமை நல்குமே

செய்ய மேனியீர் மறைகொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே

நீருபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே

காமன்வேவஓர் தூமக் கண்ணிணீர்
நாமம் மிழலையீர் சேமம் நல்குமே

பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடரினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர இறக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே

பறிகொள் தலையினார் அறிவுதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவதரியதே

காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழைமேல் தாழும் மொழிகளே

திருச்சிற்றம்பலம்















Sunday, April 4, 2010

துன்பங்களை நீக்கி இன்பம் தந்தருளும் பதிகம்..

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனை பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கனைத்தெழுந்த வேண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

மலை புரிந்த மன்னவன்றன் மகளையோர் பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை யாரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடுந் தலைவநின் தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடைமேர் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கனையால்
மாறுகொண்டார் புரமெறித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதேன்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் நேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்
கேழல் வெண்கொம் பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமனும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே

திருச்சிற்றம்பலம்













சனி பகவானால் வரும் தோஷங்கள் நீங்க பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்



போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோடு ஏழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே

ஆன்முறையா லாற்ற வெண்ணீறாடி அணியிழையோர்
பான் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான் மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே

புல்கவல்ல வார்சடை மேற்பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றை மாலை மதியோடுடன் சூடிப்
பல்கவல்ல தொண்டர் தம் பொற்பாத நிழர்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே

ஏறுதாங்கி யூர்திபேணியேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடரவஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே

திங்களுச்சி மேல்விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி எம்மிறைவன் என்றடியே இறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடியார் கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே

வெஞ்சுடர்த்தீ அங்கைஏந்தி விண் கொண்முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல் பாடல் பேனுவதன்றியும் போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடிதிகழ்த்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுவதன் றியும் போய்ப்
பட்ட மார்ந்த சென்னிமேலோர் பால்மதியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே

உண்ணாலாகா நஞ்சு கண்டதுண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ண நீழல் ஆரழல் பேலுருவம்
எண்ணலாகாவுள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே

மாசு மெய்யர் மண்டைதேரர் குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன் மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே

தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நல்லாரேத்து பாடல் பத்தும் இறைவல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகிலுறைவரே

திருச்சிற்றம்பலம்