Sunday, April 4, 2010

நரம்புத் தளர்ச்சி, வாத நோய், வலிப்பு முதலிய நோய்கள் நீக்கும் பதிகம்


துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ்சூழ
வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலமெலாஞ் செய்து பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பே

கலைபுனை மானுரி தோலுடையாடை
கனல் சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தாரணி மார்பார்
தம் அடிகள் இவரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர் செய்வதோ இவரீடே

வெஞ்சுடராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிடமாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதை செய்வதோ இவர் சீரே

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
கனல் தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்தழகாய
புநிதர் கொலாம் இவர் என்ன
வனமலி வண்பொழில் சூழ்தருபாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையைவாட
மயல் செய்வதோ இவர் மாண்பே

மாந்தர் தம்பால் நறுநெய் மகிழ்ந்தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தார் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்சதுர்
செய்வதோ இவர் சார்வே

நீறுமெய்பூசி நிறைசடை தாழ
நெற்றிக் கண்ணாலுற்று நோக்கி
ஆறதுசூடி ஆடவராட்டி
ஐவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர் செய்வதோ இவரீடே

பொங்கிள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை
வெண்ணூல் புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய
குழகர் கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர் செய்வதோ இவர் சார்வே

ஏவலத்தால் விசயர்கருள் செய்து
இராவணனை ஈடழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய்
மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் மொழிற் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதை செய்வதோ இவர் சேர்வே

மேலது நான்முகன் எய்தியதில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியதில்லை
என இவர் நின்றது மல்லால்
ஆலதுமாமதி தோய் பொழிற் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ இவர் பண்பே

நாணொடு கூடிய சாயினரேனும்
நகுவரவர் இருபோதும்
ஊணொடு கூடியவுட்கு நகையாலுரை
களவை கொள வேண்டா
ஆணோடு பெண் வடிவாயினர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனை செய்வதோ இவர் பொற்பே

அகமலி அன்போடு தொண்டர் வணங்க
ஆச்சிராமத் துறைகின்ற
புகைமலி மாலை புனைந்தழகாய
புனிதர் கொலாம் இவரென்ன
நகை மலி தண்பொழில் சூழ்தரு
காழிநற்றமிழ் ஞான சம்பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை ஏத்த
சாரகிலா வினை தானே

திருச்சிற்றம்பலம்